Sunday, April 26, 2009

கடல் சூழ் தேசம்...


ஊழிக் குரலாய்
உரசிச் சென்றது
காற்று....

உப்புக் கரித்தது
கல்லில் மோதி
வாயில் விழுந்த
கடல் துளி....

பாசி படர்ந்தும்
வழுக்காது
குழி விழுந்த பாறைகள்.....

ரயில் தெருவின்
ஓரத்தில் இடையிடையே
அசையும் மறைப்புகள்...

பிடி தளராது சுழலும்
குடைகள்....

கல்லில்
மோதும் அலைகள்
நல் வாழ்த்து
சொல்வதாய் கற்பனை....

எல்லாம்
வழமை போலவே....

பாறையோடு
காதல் கொண்டு
அலை சொல்லும்.;
''மறு முறை
முத்தோடு வருகிறேன்...''
முடிந்ததே இல்லை...

மீண்டும் மீண்டும்
பிண எச்சங்களாய்.....