Tuesday, January 20, 2009

"வயதுக்கு வருதல்..?"


''அம்மா

எனக்கு

எப்போது

பதினெட்டு

வயதாகும்....?''

எது வரை இது நீளும்...?


மனிதங்கள்
மரணித்து விட்ட
மண்ணில்
கவிதைகளுக்கு என்ன
கடமை....?

கவிஞர்களே...!
கடதாசிகளைக் கொடுங்கள்...
முடிந்தால் இவர்களின்
வயிற்றை நிரப்பட்டும்...
இல்லையேல்,
கண்ணீரையாவது
துடைக்கட்டும்....!

மூடி திறக்கப்பட்ட
பேனாக்களைக் கொடுங்கள்...!
எதற்கும்
கை காவலாய்
சட்டைப்பையில் இருக்கட்டும்...
அதுவாவது....!!