Monday, November 27, 2017

26.11

செந்தமிழ் வாழ்த்திடும் கொடையாகினாய்
சிந்திய குருதியில் சிறையாகினாய்- உன்
முந்தையர் பாதையில் முடிவாகினாய்-பேர்
அந்தமில் ஈகையால் முதலாகினாய்..

வைகறை எண்ணி அறைகூவினாய் -நம்
வாசலில் வசந்தத்தை விலை பேசினாய்
வந்தது சேரமுன் இளைப்பாறினாய் -விடி
வானில் இருந்து நீ பூத்தூவுவாய்....

-வேல் சாரங்கன்

1 comment:

Anonymous said...

Lovely lines 🥰🥰