Friday, August 15, 2008

வெற்றிகளின் வேர்கள்.....


வாழ்க்கை என்பது
வரமா, சாபமா
தெரியவில்லை...;
ஒவ்வோர் உயிரியும்
எதற்காகவோ
போராடியபடி.....

சிகரம் கட்டி
நிமிர்ந்து நிற்கும்
நூற்றுக்கணக்கான
வெற்றிகளின் காலடியில்
புதைக்கப்பட்ட
கோடிக்கணக்கான
தோல்விகளின்
முகவரிகளைத் தொலைத்தபடி
நகர்கிறதுகாலம்....

முயற்சித் தூண்களால்
முற்றாக்கப்பட்ட
பாசறைகளின் உச்சியில்
வெற்றிக்கொடியின்
வீரத்தாண்டவம்...!

கல்லறைகளின்
ஆழத்திலிருந்துவரும்
தோல்வியின் கதறல்கள்...,
தமக்கு மட்டும்
காலம் பொய்த்ததாகவும்
கடவுள்
கண் மூடியதாகவும்...

முப்பதாவது காதலில்
வெற்றி கொண்டவனைப் பார்த்துப்
பெரு மூச்சுவிடுகிறான்
முதற் காதலில்தோற்றவன்...!!!

No comments: