Saturday, March 21, 2009

துணை....!

ஒளியின்
சலனமற்று நீளும்
இரவு.......;

மனித வாசனைகள்
தொலைவாகிப் போன
அடர் வனம்.......;

இருதயம் முடுக்கும்
விசித்திர, அமானுஷ்ய
ஓசைகள்.......;

இடமும் வலமுமாய்
கோர்க்கப்பட்ட
பத்து விரல்கள்.....;

நம்பிக்கையில்
நகரும்
நான்கு பாதங்கள்..............
***
மூலமறியா முரண்...
**
விடுவிக்கப்பட்ட விரல்கள்..;
இரண்டு பாதங்கள்...
*
இருள்.............

No comments: