Saturday, March 21, 2009

விழி தூவி விடைபெறுதல்.....


காதல் என்ற
நிச்சயமற்ற விண்ணப்பத்தால்
கிழித்தெறியப்பட்ட
நட்பு என்ற
நிரந்தர உடன் படிக்கை.....!

மிக ஆழமான
செவிமடுப்பில்
கிரகிக்கப்படும்
அந்தகார
ஓசைகள் போல்....,
எனக்குள்
நான் மூழ்குகையில்
வெளி வரும்-உன்
சலங்கைச் சிணுங்கல்கள்....!

உன்னையும்
என்னையும்
சுமந்து பயணிக்க
இன்னும்
பேருந்துகள் வரும்....!

ஆனால்.....,

வழி இலக்கங்கள்
வெவ்வேறாக......!!

1 comment:

Iynka said...

நட்பின்போது ஏற்படும் அடிப்படை உணர்வுகளிற்கும் காதலின்போது ஏற்படும் அடிப்படை உணர்வுகளிற்குமான வித்தியாசங்களை யாராவது வரையறுக்க முடியுமா?