Monday, June 1, 2009

இதய மாற்று சத்திரசிகிச்சை......!


கல்லுண்ட நெஞ்சம்
கனிவுண்டு எழுந்துற்று,
மெல்லுண்ட பெண்மை
மேலும் இழகிற்று,
சில்லென்று காற்று
சீதளம் சுமந்துற்று,
சொல்லென்றுரைக்கும்;
சொல்ல முடிவதில்லை......

கண்கள், கோடி
மின்னல்கள் வெட்டும்,
நோக்க நினைத்திருக்கும்
நோக்கும் கால்
மண் நோக்கும்...!
பார்க்கப் பொழுதகலும்,
பாதி உயிர் போய் மீளும்....!
வேர்க்கத் தொடங்கி விடும்,
வேறுலகம் ஆகி விடும்....!


நினைவுகள் கூடிநிறைவாக்கும்
'நீ' யில்லையேனும்
நினைவுகளோடு
நீண்ட பொழுதகலும்.....
நாள்கள் மணிகளாய்,
மணிகள் நிமிடங்களாய்,
நிமிடங்கள் நொடிகளாய்,
சிந்திக்கும் தோறும்
செவ்வணுக்கள் ஒவ்வொன்றும்
சிலிர்த்திருக்கும்....

காலங்கள் கடந்தும்
காரணமறியாத காரியமாய்...,
பாதையறியாது வந்தடைந்த
பயணியாய்,
பிரிவில் ரணம் தரும்
புதிராய்.....
கத்தியின்றி ரத்தமின்றி
உனக்குள் ஒரு
குருசேஷ்திரமே
உருக்கொள்ளும்......
அதுவே பின்பு
அழகிய மலர்கள்
தலையசைக்கும்
நந்த வனமாய் பூக்கும்.....

கூரிய வேலால்
உன் இதயம் கீறப்படும்
அதே கரங்களால்
வருடப்படும்....!
ஒரு துளி குருதியும் சிந்தாமல்,
எந்த வைத்திய நிபுணனும்
இல்லாமல்,
சத்தமில்லாமலே நடந்து முடியும்
ஒரு இதய மாற்று சத்திரசிகிச்சை......!!

7 comments:

Anonymous said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

Unknown said...

நல்ல அருமையான கவிதை.

nl said...

Interesting Good work. Keep it up.

Muruganandan M.K. said...

மிகச் சிறப்பான வரிகளைக் கொண்ட கவிதை.
இனிய 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வேல் சாரங்கன் said...

உங்கள் வருகைக்கும் விமர்சனத்துக்கும் மிக்க நன்றி Tamilers, Paskar, Vaanampaadi and Dr.M.K.Murukananthan sir.
புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Unknown said...

Very Nice, Keep it up

வேல் சாரங்கன் said...

Thanks Vidya...