Wednesday, September 23, 2015

சரித்திரத்தில் சரிபாதி நீ....


நீ உன் வயிற்றில் தீ மூட்டினாய்...
தீவின் திசைகள் எங்கும் பற்றிக்கொண்டது,
அகிம்சை அக்கினி......!

கனன்ற தீயின் சூரிய ஒளியில்
களையிழந்து போயிற்று ,
காந்தீய தீபம்....!

அகண்ட தேசத்தின்
இருண்ட குகைகளில் தெறித்த
உன் அகிம்சை ஒளியில் மின்னின ,
நரிகளின் விழிகள்.....!

 யுத்த யுகம் பேசும் நாளைய சரித்திரத்தில் ,
மொத்தத்தில் சரி பாதி,
நீயும் உன் மார்க்கமும்....!!

மீதிக்குள் பதிவுறும்
போரும் போர் குற்றங்களும்......

No comments: