Friday, November 27, 2015

துயின்று எழும் தூயவர்கள்......!

கால நதி  கண் முன்
       கடந்து நகர்கையிலும்,உங்கள்
கனவு வெளி மட்டும்
       நீண்டு விரிகிறது............

சொல்லாயிரங்களிலும்
      சிக்காத ஈகையுடன்
பல்லாயிரங்களாய்
      புதையுண்டு போனவரே .......

விதைகளாய் முளைத்து
      விழுதெறிந்த செய்தியினைக்
கதைகளாய்க்  கேட்கும்
       கட்டிளமைச் சந்ததியாய்
மீள்பிறப்பின் கட்டியமோ.....
      ரயில் கடவை மீதொளிர்ந்த தீபம்.....?

No comments: