Wednesday, May 6, 2009

உனது பிரசன்னம்...!


புரட்டப்பட்ட
புத்தகத்தின்
பல நாள் ரேகை படிந்த;
கடந்து போக முடியாத
பக்கங்களிலும்.....

ஒரே பக்கத்தில்
மீள மீள வாசிக்கப்படும்
பந்திகளின் இடையேயான
முற்றுப் புள்ளிகளிலும்.......

படுக்கையறையின்
மேல் முகட்டில்
படர்ந்த
ஒட்டறைகளிடையே
பார்த்துப் பழகிப் போன
பொட்டுப் பூச்சியின்
தரிப்பிலும்.......

மூடப்படாத
கண்களால்
மூன்று நேரம்
தரிசிக்கப்படும்
பெண் சாமிப் படங்களிலும்......


ஏதோ ஒரு
முக்கிய தேதிக்குப் பின்,
கிழிக்கப்படாமல்
தொங்கும்
நாள் காட்டியின்
தேதி எழுத்துகளிலும்.....

இருந்து கொண்டேயிருக்கிறது
உன் பிரசன்னம்......!

3 comments:

sakthi said...

ஒரே பக்கத்தில்
மீள மீள வாசிக்கப்படும்
பந்திகளின் இடையேயான
முற்றுப் புள்ளிகளிலும்.......

arumai nanba

sakthi said...

படுக்கையறையின்
மேல் முகட்டில்
படர்ந்த
ஒட்டறைகளிடையே
பார்த்துப் பழகிப் போன
பொட்டுப் பூச்சியின்
தரிப்பிலும்.......

vithyasamana varigal

sakthi said...

ஏதோ ஒரு
முக்கிய தேதிக்குப் பின்,
கிழிக்கப்படாமல்
தொங்கும்
நாள் காட்டியின்
தேதி எழுத்துகளிலும்.....

இருந்து கொண்டேயிருக்கிறது
உன் பிரசன்னம்......!

mudithu erukum vitham arumai ma