Thursday, May 28, 2009

பிரசவங்கள்....!

இந்தக்
கட்டிலில் தான்
நானும் பிறந்தேனாம்….
என் தாய் சொன்னாள்…!
பின்பு இதை
எத்தனையோ
பூச்சிகள்;
எலிகள்;
பூனைகள்
பிரசவ விடுதியாக்கின…..

பின்பு ஒரு நாள்
அதன் சட்டங்களையும்
பலகைகளையும்
‘அவர்கள்’
காவிப் போயினர்…….
பச்சை வர்ணம் பூசப்பட்டிருந்தது.…
‘அவர்கள்’ ஏதோ ஒரு
பிரசவத்திற்கு
தயாராகியிருந்தனர்……...

No comments: