Wednesday, May 27, 2009

நவீன இராமர்கள்....

தெரிந்தோ
தெரியாமலோ
இதயத்து அறைகள்
அசோக வனம் ஆகின…..
ஆனால்.....
வாயு மகன்,
வாலி மகன்
தேடி வரவில்லை;
இராகவனும்
யாரையுமே
தூது விடவில்லை….!

பிந்திய செய்தி…..;
அவனும் ஒரு
அசோக வனத்து
உரிமையாளனாய்….....!!

No comments: