Wednesday, May 27, 2009

முடிந்ததும் முடியாததும்……

புகார் போகாத
அந்தப்
புலரிகளில்
விழித்து
வெளியேறிய போது
புலராத மீதிகளாய்
புகார் கட்டிகளாய்
தெரிந்த
கறுப்பு உருவங்கள்
சுற்றி வளைத்து,
சாய்த்து,
சாரியாய் நிற்க வைத்து,
ஒவ்வொன்றாய்
தலையசைத்து,
தட்டித் தடவி
விடும் வரை
காத்திருப்பு……...
கடிகாரமும்
கண்களுமாய்……
சுய விருப்பின்றி…..

பின்பும் அப்படித்தான்……
கால்கள் கடுக்க….
ஆனால்..,
அவர்களாகவே…….!


பின் இணைப்பு;

எதிர்ப்பு போராட்டங்கள்,
பேரணிகள்,
பகிஷ்கரிப்புகள்,
கடையடைப்புகள்,
வேலை நிறுத்தங்கள்,
நிர்வாக முடக்கல்கள்
எல்லாம் ஈற்றில் ஒடுங்கின…..,
பரமேஸ்வரன் கோவில்
கூட்டுப் பிரார்த்தனையாய்……..!!

1 comment:

கிருஷ்ணபிள்ளை குருபரன் said...

பலமிழக்கும்போது இதுதான் நடக்கும்