Wednesday, May 9, 2007

சலனம்...

முத்தாகி என்னுள்
முழுதாய்அமிழ்ந்திட்டாய்...

இத்தால் உலகில்
இன்பங்கள் யாவும்
வைத்தாள்,பராசக்தி;
உன்னிடத்தில்
எந்தனுக்கு...?

இதழிடுக்கில் ஊர்ந்து,
சுழித்துச் சிலிர்க்கின்ற
புன்னகைக்குள்
என்னை
பொறி வைத்தாய்...
போதை விழிவைரத்து
மளிக்காத
விளிம்புகளால்
கோலம் வரைகின்றாய்
இதயத்துள்...
காலமிது
கெட்டுக்கிடக்கிறது;என் வாழ்வு,
சாலை நடு மீது
சரிந்துளது...!

கல் எனவோ;காலில்
காயம் விளைவிக்கும்
முள்ளெனவோ-தூக்கி
வீச மறுக்கிறது மனசு..!

காலம் கனியும் பொழுதுகளில்
மீண்டும் உன்
'ஜாலம்' தொடரட்டும்...
இன்று போய்நாளை வா...!

No comments: