Tuesday, May 8, 2007

சில சல சலப்புகளின் முடிவு..!


இருளின் ஒரு துளி
உருகி உறைந்து,
திரள் கொண்டிருப்பது போலும்- சுவரினில்
உருக்கி தெளித்த கரு'மை'
உறைந்து,
உயிர் கொன்டசைவது போலும் இருந்தது...

மின்சூழ் ஒளியின் கற்றைகள் பட்டு
மிளிர்ந்தது;மெல்ல
மிரண்டே அசைந்தது...

தென் ஈர்க்கு கற்றைகளின்
கால் தீண்ட உவப்பிலா
இடுக்கில் நுளைந்து,
உடலம் மறைத்தது ...

பாதி அடி பட்டு
பதறிப் பதை பதைத்து
நாசினியில்,
நாசி
நாற்றமிசை துயருற்று
நான் ஏறி ஓடும்
ஈருருளி மீது
இடுக்கில் ஒளிந்துளது...!

இறந்ததுவோ இல்லை
இறங்கிமறைந்ததுவோ...?
உறுதிப்பாடில்லாது
இருக்கையினில் ஏறி
இருப்பது தான் எவ்வாறு..?

சக்கரத்தின் மேலிடுக்கில்,
சீற்றடியில்,
செயின் கவரில்
சிக்கியதோ என்று பெரும் தேடல்...!

ஆளுக்கு ஆள் மாறித்
தேடியதில்;திகில் கொண்டு
ஓடியதில்,வந்து
கூடியது அயல்..!

அரை மணியின் பின்
அமைதி தொலைத்திருக்க,
சற்று தொலைவில்...,
எப்போதோசெத்துப்போய்
அமைதியாய் கிடந்தது,
சிலந்தி..!

No comments: