Tuesday, May 8, 2007

வெறி..!

உலகின்
பெரும் துயர்
எதுவென வினவினாய்...

மேல்,கீழ்
எனப்பெரும்
தேசம் பிரித்தலும்..
நிலத்திடை
கண்டப்பிரிவுகள்
செய்தலும்..
தேசியம் பேசி
மானிடம் மறத்தலும்..
கறுப்பினம் என்றொரு
ஒறுப்புகள் செய்தலும்..
கடவுளின் பெயரில்
மத வெறி கொள்ளலும்
ஈனம்;அதிற்
கடை ஈனம்
அறிவையோ?

உன்னில் நானும்
என்னில் நீயும்
வேறென்றுணர்தல்...!

No comments: