Monday, May 14, 2007

புன்னகை...!







வாழ்வின்
பயணங்களில்
இடையிடையே சந்திக்கும்
உன்
ஏகாந்தப் புன்னகை...!

சில நொடிகள்
சலனத்தின் பின்
இயல்பு மீளும்
வாழ்வு....

எல்லோர்க்கும்
நீ வழங்குவது என்றோ
உன் இயல்பு நிலை
அதுவென்றோ
அர்த்தம் சொல்லும்
மனசு...

பல
தடவைகளின் பின்பு....
தோற்றுப்போனதை
ஏற்க மறுக்கும்
திமிர்...

விலங்கிட முடியாத
உணர்வுகளோடு
உன்
புன்னகையின்
அர்த்தத்திற்கான
தேடல்....

இறுதியில்
மனத்திரை கண்டது
'மொனாலிஷா...!'

அர்த்தம்
கண்டதான பூரிப்பு
ஒருநொடிக்கு மட்டும்...!

பின்பு
டார்வின்சியை தேடி
வாழ்வு.....!

1 comment:

Anonymous said...

hi, I could not undersatnd your theme exactly!!!