Tuesday, May 15, 2007

சாவு நெருங்குதல்......!


அவர்களிடம்
பெரியதொரு பட்டியல்
இருக்கிறது....!

ஒருபுறமாக
தேய்வடைவதும்
மறு புறமாக
வளர்தலும்
கொள்ளும் விகிதங்கள்
ஒன்றையொன்று
விஞ்சுவதாய்..;
'மேசைக்கு போதலும்
வெளியேறுதலுமான'
சந்த முறைகளின்
இடையே...
இயக்கமுறுகிறது
பட்டியல்.....

ஒவ்வோர்
கணக்காய்
முடித்துக்கொண்டு வருவர்....

பட்டியல் குறுகுவதில்
முனைப்பாய்...

நேர் நின்றெதிர்த்தோர்,
காட்டிக்கொடுத்தோர்,
மறுபுறம் சார்ந்தோர்,
பெரும் பழி செய்தோர்,
உடன்பட மறுத்தோர்,
எதிருரை செய்தோர்,
எழுத்தில் எதிர்த்தோர்,
தெரு வம்பளந்தோர்.......
எத்தனை என்பது
அவர் கணக்கறியார்...,
பட்டியல் தேய்வதே
பெரு முனைப்பாக.....

தட்டிச்சரித்து
தெருவினில் போடலும்
வெட்டி,
வெளியிடை
வீசி எறிதலும்
பற்றைகளிடையுடல்
பதுக்குதலோடு
பெரு வெளி மணலிடை
புதைத்தலும் நிகழும்...

பட்டியல் தேய்ந்து
குறுகி வருதலில்
குற்றமும் தீவிரம்
குறைந்தே சென்றது...

நேற்றோர்
தெருவினில்
நெற்றி நடுவினில்
ஏற்றிய சன்னம்
உள் சென்றசைந்து
ஈற்றினில் பிடரியால்
வெளிவந்திருக்க
மூளை சிதறி
முளி வெளியேறி
முற்ற வெளியிலோர்
முதியவர்கிடந்தார்...

சந்திக்கடையருக்
குந்திலிருந்து...,
சிந்தும் கடவாய்ச்
சாற்றை துடைத்து,
வெற்றிலை சப்பிய
விசை தலைக்கேறி....
ஒற்றை வார்த்தை
உமிழ்ந்தவர் கிழவர்....!

"அவங்களுக்கென்ன
அரசியல் தெரியும்..."

அடுத்த நாளே
அவர் போய் சேர்ந்தார்...!

பட்டியல் நகருது....
அடுத்த கட்டம்
எதுவெனத்தெரியுமா?

மரணம் நமது
அருகிலெ உள்ளது....!

'சும்மா இருந்தோர்'
சுடப்படுதல்.....!!

இனியும் ஏன் தான்
சும்மா இருப்பான் நீ?

2 comments:

Nisha Nathan said...

the way u expressed ur idea is realy great! carry on

Anonymous said...

HI,
They chase always, we run always!!!!how far we can run!!!!list never decreases because of some our honest people?????

Keep it up!!!

From-Aatharshan-www.eelatamils.com