Wednesday, May 9, 2007

உடமைகளோடு...

குஞ்சுக்குடிசை...
கூரை செல்லரித்து,
நீலம் தெரியும்...;
நீர் சேரும்,மாரியினில்...!

பட்ட கதிகால்;சில
பழைய துருப்பேணிகள்...

ஊசித்துளைகளினால்
உருக்குலைந்த பழம் பானை...

போன முறை ஓடித்
திரும்புகையில்,
தெருவிலெடுத்த
பச்சைப் பெட்டி நிறைய,கிளிஞ்ச
பழம் சேலைகள்...

வாலை ஆட்டியபடி ஒரு
குட்டி நாய்...!

பல் விழுந்த வாயின் புறுபுறுப்பு...
"நான் சேர்த்ததுகள்...,
விட்டிட்டு போகேலா;
வாறது வரட்டும்"!!

No comments: