Tuesday, May 8, 2007

நன்றி

எங்கள்
பயணத்தின்
பாதைகளில்
மறந்தே போனோம்...!

கட்டவிழ்ந்த சுமையை
கட்டி விட்டவனை..,
கால் செருப்பு
தைத்தவனை.,
காய்ந்த நா
நனைத்தவனை...;

இன்னுமொன்றை...,
காத தூரம் தொடர்ந்து வந்து
களைத்து வீழ்ந்த
கறுப்பனை..!!

No comments: