Sunday, May 13, 2007

மனிதம்.....

உன்னை
எவளோ ஒரு தாய்
பெற்றிருப்பாள்...

அவள்
யாரென அறிகிலேன்...

இந்தக்கணத்தில்
உன் செய்தி
அவளை
எட்டியிருக்கும்...

நீ
சிதறிப்போயிருக்கிறாய்...;
நான்
முன்பு நடமாடிய
தெரு ஒன்றில்...!

இன்னும்
நினைவிருக்கிறது
எனக்கந்தச் சாவடி...!

சிலபோது அவர்கள்
எங்கள்பரீட்சைகளை
நிறுத்தினர்...
பல போது
பயணங்களில்
இறங்கி,
உருட்டச்சொல்லினர்
சைக்கிள்களை...

சாவடியின்
சற்று தொலைவிலிருந்து,
மாதிரிகள் பல
அனுப்பப்பட்டன...;
சில
சகோதரிகளின்
உள்ளாடைகளோடு...
டீ.என்.ஏ சோதனைக்காய்...!

அதே தெருவில்
நீ இன்று....
சிதறிப்போயிருக்கிறாய்...

நீ
சிலுவைகள் சுமந்தது
பற்றியும்..
உன் கல்லறைகள்
கருவறைகள் ஆவது
பற்றியும்
இனி பேசப்படக்கூடும்....

அது வேறு கதை...

உன்னை
எவளோ ஒரு தாய்
பெற்றிருப்பாள்....

ஓ..!
நீ சிதற வைத்த
பண்டாரவையும்....!

2 comments:

Anonymous said...

when Humanity is only written book and stage-speeches....this is normal Dear!!!!!this is the secret of dieing for life!!!they are great people!!!whatever other people say!!!!!

good!!!keep it up!!!

From-Aatharshan-www.eelatamils.com

Anonymous said...

it was sad to read it...letz hope for the best for our pples' future