Thursday, May 10, 2007

வேலிகள்...

நீண்ட
இடைவெளிக்கு பிறகு
நாங்கள் சந்தித்திருந்தோம்....

ஆரத்தழுவி
தோளில் கையிட்டபோது,
'அது' தட்டுப்பட்டது....

"நீ...."
என்றேன்...
"ஓம் நாங்கள்சேர்ந்திட்டம்"
அறுபது வயது
அப்பாவைச் சுட்டினான்...

நெஞ்சின்
நரைத்த மயிர்களுக்கிடையில்
'அது' தொங்கியது...
அவன்
அக்காவின் கழுத்திலும்...
இல்லை,
அது மஞ்சள் நூல்...!
'அந்த'சின்னம்துலங்கியது...

தாலி பெண்ணுக்கு
வேலி என்பார்களே...?

'ஆமாம்;
களமும்
கணவனும்
தாண்டி அகல விடாத....'
ஓ...!
தேவைப்பட்டால்,
தேசத்திற்கும்.........!

மெளனித்தேன்...
அவன் இப்போது
உள்ளே இருக்கிறான்...!

No comments: